அரானா பக்கம்

Sunday 19 January 2014

அரானா கவிதைகள்

07/12/13

ஒளிஇல்லாதஅறை
உன்னுடையஒலி
அங்கே
வெளிச்சத்தை
நிரப்பிக்கொண்டிருக்கிறது
ஒளியில்லா
ஒலியின்
ஓவியம்
ஓவியத்தின்
கண்சிமிட்டல்
ஓவியத்தின்
சிரிப்பு
ஓவியத்தின்
ஏக்கம்
இவையெல்லாம்
ஒளியில்லா
அறையின்
ஒலிகள்
ஒலிகளால்
பார்க்கப்படுகிறேன்
ஒளிகளால்
கேட்கப்படுகிறேன்…!
***
மெய்மறந்தேன்
பொய்மறந்தேன்
இவைகள்
உன்னை
நினைக்கச்சொல்கிறது…!
***
அறிமுகம் இல்லாத
ஒருவர்
பெயர்
ஊர்
சொல்லி
என்னிடம் அறிமுகமானார்
மீண்டும்
அறிமுகமில்லாத
ஒருவருடன்
என்னை
அறிமுகப் படுத்திக்கொண்டேன்…!
***
காற்று
ஊடுருவாத
இடத்தில்
வசிக்கப்பழகுகிறேன்
சுவாசிக்க
மறக்கிறேன்
உணராத
உணர்வு
ஆட்கொண்டு
தேகத்தில்
ஊடுருவி
உளவுப்பார்ப்பவன்
போல்
ஆழ்மன
அமைதியை
ஒளிந்து பார்க்கிறான்
அங்கே
நான்
பயந்து உட்கார்ந்திருக்கிறேன்…!
***
கலவி
இப்படித்தான்
முடியுமோ
தேகம் முழுவதும் படர்ந்திருக்கு நீர்த்துளி
உதடுகளை நனைத்து
நகங்களை கத்தியாக
உருமாற்றி
கலவி
இப்படித்தான்
வன்முறையுடன்
முடிந்திருக்கிறது
இரவைப் பசியால் விழுங்கினோம்
நிலவை ருசியால் பருகினோம்
தெரியாமல் தொட்டு
தெரியாமல் முத்தமிட்டு
தெரிந்தும்
தெரியாமல்
ஒட்டிக்கொண்டு
கலவியை
நாம்
கற்றுக் கொண்டோம்
கலவியிமிருந்து அல்ல…!


No comments:

Post a Comment