அரானா பக்கம்

Monday 4 November 2013

29/10/2013
இன்றுதான் ஞாபகம் வந்தது
நாம் பேசிக்கொள்ளாத நாட்கள்
நாம் பார்க்காத நாட்கள்
நாம் கைக்கோர்க்காத நாட்கள்
இன்றும்
உன்னுடைய புகைப்படத்தைப் பார்க்கிறேன்
அதிலிருக்கும்
உன் சிரிப்பைப் பார்க்கிறேன்
உன் கண்களைப் பார்க்கிறேன்
உன் நினைவுகளைப் பார்க்கிறேன்
இன்றுதான் ஞாபகம் வந்தது
இதையெல்லாம் உன்னிடம் சொல்ல
*****
அவள் பெயரைக் கேட்டேன்
ம்என்றாள்
அவள் முகவரியைக் கேட்டேன்
ம்என்றாள்
கடைசிவரைம்மைத் தவிர
வேறெதுவும் சொல்லவில்லை
ம்
என்னை பலவீனம் கொள்ள செய்தது
இருந்தும்
ம்
எனக்கு பிடித்துப்போனது.

அரானா அழகுச்செல்வன்

No comments:

Post a Comment