கவிதை எழுதி
ரொம்ப நாளாச்சு. எதைப் பற்றி எழுதவேண்டும்
என்று தெரியவில்லை.
ஏதோ சில
வார்த்தைகளைக்
கோர்த்து
எழுதிவிட்டேன்.
உன்னிடம் பேச
ஆயிரம் இல்லை
இரண்டாயிரம் இல்லவே
இல்லை
கோடிக்கான நினைவுகள்
பகிராத உணர்வுகள்
என்னை உன்னிடம்
ஒப்படைக்க
சரியான தருணம்
வரும் வரை
காத்திருப்பேன்…
மீதமிருக்கும் வார்த்தைகள்
மீதமிருக்கும் மூச்சுக்காற்று
மீதமிருக்கும் முத்தங்கள்
மீதமிருக்கும்
மீளாத நினைவுகள்…
அரானா அழகுச்செல்வன்
கதவுகளை பூட்டப்போகும்போது
சில யோசனை
சில சந்தேகம்
சில தடுமாற்றம்
இது மனநோய்
இல்லை
ஜன்னலிடம் சொல்லிவிடுங்கள்
கடிகாரத்திடம் சொல்லிவிடுங்கள்
நாற்காலியிடம் சொல்லிவிடுங்கள்
வளர்க்கும் பூச்செடியிடம்
சொல்லிவிடுங்கள்
வீடு திரும்பும்
வரை கதவைப்
பார்த்துக்கொள்ளுங்கள்.
அரானா அழகுச்செல்வன்
No comments:
Post a Comment