இதை டைரிக்குறிப்பு
என்று சொல்லமுடியாது,
டைரி எழுதுவதற்கு
எனக்கு தைரியம், அதில் உண்மையை
மட்டும் தான் எழுதவேண்டும். ஆனால் இதில் நான் எழுதப்போவது
அந்நாளில்
என் வாழ்வில்
என்ன நடந்த
சம்பவங்கள்,
பார்த்தக்
காட்சிகள்
தான்.
வடபழனி, சென்னை
17/7/2013
வில்லிவாக்கத்திலிருந்து வடபழனிக்கு
வந்துவிட்டேன்,
AVM STUDIO அருகில்
நண்பர் விஷ்சபாலா
-வின் நண்பர்
ரவி அவர்கள்
அழையா விருந்தாளியாக
தங்கவைக்கப்பட்டேன். நண்பர்
விஷ்வபாலா
படத்திற்கு
கதை விவாதத்திற்கு
வந்தேன், வந்த முதல்
நாள் கதையை
விவாதம் செய்தோம், இரண்டாவது
நாளிலிருந்து
போகவில்லை,
தயாரிப்பாளர்
பின் வாங்கிவொட்டார்.
இரண்டாவது நாளிலிந்து
வேலையில்லாமல்
இருந்தேன்.
டென்சில் அண்ணனின்
நண்பர் விஜயபாலா என்னை அழைத்து
அவர் படத்திற்கு
கதை விவாதத்திற்கு
அழைத்தார்.
அங்கே தான் தினமும் கதை விவாதம்
செய்தோம்.
21/7/2013
நான் தங்கியிருந்த
அறைக்கு பக்கத்து அறையில் தெலுங்கு பேசும் பாட்டி ஒருவர் தனியாக தங்கியிருந்தார்,
அவருடைய மகன் இன்று
வருகிறார்
போல, அதை
எல்லோரிடமும்
மகிழ்ச்சியான
முகத்துடன்
சொல்லிக்கொண்டிருந்தார்,
அந்தப் பாட்டியை நான்கு நாட்களாகத்தான்
பார்க்கிறேன்.
இன்று அவர் முகத்தில்
வழக்கத்திற்கு
மாறாக சந்தோஷம்.
காலையிலே மீன் வாங்கி சமைத்துக்
கொண்டிருண்டிருந்தார்.
பாட்டி ஆந்திரா
என்பதால்
மசாலா வாசனை அடுத்த
இரண்டு அறையை கடந்து
காற்றோடு
காற்றாக கலந்து கொண்டிருந்தது.
எங்கள் அறையில்
குடிப்பதற்கு
தண்ணீர் இல்லை, பாட்டியிடம்
சென்று WATERCAN- ல் தண்ணீர்
கேட்டேன்,
அப்போது அவர் மகன்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
பாட்டி என்னிடம் மகன்..வந்திருக்கான்
என்றார், நான் எந்த
ஊரிலிருந்து
வந்திருக்கார்
என்று கேட்டேன், பாட்டி சூலூர்பேட்டை
என்று கூறினார்.
நான் வேறேந்த
கேள்வியும்
கேட்காமல்
தண்ணீரை மட்டும் வாங்கி வந்துவிட்டேன்.
22/7/2013
மாலை செய்தி
இதழில்
1.
கர்ப்பிணி கொலை,
தலையில் கல்லைப் போட்டு கணவன் கைது,
திருகோவிலூர்,
விழுப்புரம்.
2.
அம்மாவை கண்டுபிடிச்சு
கொடு பிள்ளாயாரப்பா,
போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள
கோவிலில்
குழந்தைகள்
கண்ணீர் மனு, முத்துப்பேட்டை,
திருவாரூர்.
இந்த இரண்டு
செய்திகளும்
என்னை ரொம்பவே பாதித்தது. பெண்களும்
குழந்தைகளும்
எப்படியெல்லாம்
சமூகத்தில்
நடத்தப்படுகிறார்கள்,
மன உளைச்சல்களுக்கு
ஆளாகிறார்கள்
என்று தினசரி இதழ்கள் நம் கண்முன்னே
வார்த்தைகளாகவும்
காட்சிகளாகவும்
பதிவுசெய்கின்றன.
என்னால் வருத்தப்பட
மட்டுமே முடியும்.
FACEBOOK மற்றும்
TWITTER –ல் பதிவேற்றம்
செய்து பகிரமுடியும்,
அதற்கு மேல் என்னால்…?
No comments:
Post a Comment