அரானா பக்கம்

Wednesday 26 June 2013

ரசிக்கமுடியவில்லை

இன்று காலை (20/06/2013) ரொம்ப நாள் கழித்து வானவில்லைப் பார்த்தேன். அதிலும் எனக்கு மூன்று வண்ணங்கள் மட்டுமே தெரிந்தது. நான்கு வண்ணங்களைவானம் தின்றிருக்கும் போலும். உடனே அம்மாவை கூப்பிட்டேன், ’துணி துவைக்கறத விட்டுட்டு வரவா நீயே போய் பாரு’ அப்பிடின்னு சொல்ல நான் திரும்பவும்மாடிக்கு போய் வானவில்லைப் பார்த்து ரசித்தேன்திருத்தங்கலில் வானவில் வருவது அதிசயம் தான். ஆனால் யாருமே இதை கவனிக்கவில்லை. குழந்தைகள்பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்அப்பாக்கள் வண்டியில் வேலைக்கு போய்க்கொண்டிருந்தார்கள். வானவில்லை ரசிப்பதற்கு இங்கு யாருக்குமேவிருப்பமுமில்லைநேரமுமில்லை. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை முறை வானவில்லைப் பார்த்திருப்பான் என்ற விடைத் தெரியாத கேள்விவானவில்லோடு கலந்திருந்தது. நான் சிறுவயதில் வானவில்லை நான்கு அல்லது ஐந்து முறை பார்த்திருப்பேன். அறைவட்டமாக இருப்பதைவிட முழுவட்டமாகஇருந்தால் எனக்கு இன்னும் நிறைய வானவில்லைப் பிடித்திருக்கும். மீண்டும் வானவில் வருவதற்கு எத்தனை நாட்கள்மாதங்கள்ஆண்டுகள் ஆகுமென்றுதெரியாது. அதை நான் பார்ப்பேனா என்ற சந்தேகமும் இருகிறது. வானவில் வானத்தின் நண்பனாமனைவிஎதிரியாகுழந்தையா..? என்ன உறவாகயிருந்தாலும்சரி வானத்திற்கு அழகு வானவில் தான். வானமே நினைத்தாலும் வானவில் வருவதை தடுக்கமுடியாது. தன்னை யாரும் பார்க்கவில்லையென்று ஏக்கத்திலோகோபத்திலோ வெறுத்தோ வானவில் நினைத்தாலும் வராமலும் இருக்கமுடியாது.
வானவில் பற்றியக் கவிதைகள் நிறைய எழுதியாகிவிட்டது. அதனால் நான் கவிதை எழுதப் போவதில்லை. இத  ாரும் படிக்காத ஒரு கடிதமாக நினைத்துவானவில்லுக்கு சமர்பிக்கிறேன்ஏழு வண்ணங்கள் இந்தக் கடிதத்தில் இல்லை.
அரானா

No comments:

Post a Comment